கோவிந்தா கோஷம் முழங்க கள்ளழகர் தீர்த்தவாரி வெகு விமர்சையாக நிறைவு

கோவிந்தா கோஷம் முழங்க கள்ளழகர் தீர்த்தவாரி வெகு விமர்சையாக நிறைவு

மக்கள் வெள்ளத்தில் கள்ளழகர்

மதுரையில் கோவிந்தா கோஷம் முழங்க கள்ளழகர் தீர்த்தவாரி வெகு விமர்சையாக நடைபெற்றது.

மதுரை கள்ளழகர் சித்திரை திருவிழா - கள்ளழகரை வைகையாற்றில் எழுந்தருளியதை தொடர்ந்து கள்ளழகரை குளிர்விக்கும் தீர்த்தவாரி நிகழ்வு வெகுவிமர்சையாக நடைபெற்றது - ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு. மதுரை கள்ளழகர் சித்திரை திருவிழாவை முன்னிட்டு மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் அளிப்பதற்காக மதுரை நோக்கிவந்த கள்ளழகர் இன்று காலை வைகையாற்றில் தங்க குதிரை வாகனத்தில் பச்சை பட்டுடுத்தி லட்சக்கணக்கான பக்தர்கள்.

புடை சூழ வைகையாற்றில் எழுந்தருளினார். இதனையடுத்து ஆழ்வார்புரம் மற்றும் வைகை வடகரை ஆகிய பகுதியில் உள்ள மண்டகப்படிகளில் எழுந்தருளினார். இதை தொடர்ந்து ராமராயர் மண்டபத்தில் தங்க குதிரை வாகனத்தில் எழுந்தருளிய கள்ளழகர் மீது அங்கு கூடியிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் தங்களது நேர்த்திகடனாக தோப்பறைகளை பயன்படுத்தி தண்ணீரை பீய்ச்சி அடித்தனர்.

முன்னதாக கள்ளழகர் முன்பாக வரும் கள்ளழகர் கோவில் மற்றும் விசிறிகளுக்கு பக்தர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து உற்சாகமாக வரவேற்றனர.

அப்போது கோவிந்தா, கோவிந்தா என்ற பக்தி கோஷத்துடன் தண்ணீரை பீய்ச்சி அடித்து ஆடிபாடி ஆரவாரத்துடன் உற்சாகமாக தீர்த்தவாரி நிகழ்வு நடைபெற்றது. இதனையடுத்து அங்கிருந்து புறப்பாடாகி வண்டியூர் பகுதிகளில் உள்ள மண்டகப்படிகளில் கள்ளழகர் எழந்தருளினர்

Tags

Next Story