சாரல் மழை விவசாயிகள் மகிழ்ச்சி !!

சாரல் மழை விவசாயிகள் மகிழ்ச்சி !!

மழை

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே திருவேங்கடம் உள்ளிட்ட பகுதிகளில் சாரல் மழை பெய்தது. இதனால் அப்பகுதி பொதுமக்களும் விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே திருவேங்கடம் உள்ளிட்ட பகுதிகளில் இன்று காலை முதல் வெயில் சுட்டெரித்த நிலையில் காணப்பட்டது. இன்று1ம் தேதி மாலையில் முதல் திடீரென்று குளிர்ந்த காற்று வீசியது. இதனால் திருவேங்கடம், கலிங்கப்பட்டி,கரிசல்குளம், அழகாபுரி,மைய்பாறை, நடுவப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் சாரல் மழை பெய்தது. இதனால் அப்பகுதி பொதுமக்களும் விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story