பெயிண்டர் கொலையில் மேலும் ஒருவர் சரண்

பெயிண்டர் கொலையில் மேலும் ஒருவர் சரண்
விசாரணை 
நாகர்கோவில் கோர்ட்டில் பெயிண்டர் கொலையில் மேலும் ஒருவர் சரண்.
குமரி மாவட்டம் கருங்கல் அருகே பூவன்சந்தி பகுதியை சேர்ந்த சுரேஷ்குமார் (44) என்ற பெயிண்டர் கடந்த ஜனவரி மாதம் ஒன்றாம் தேதி அங்குள்ள மது கடையில் மது வாங்க சென்ற போது, அதே பகுதி ஆர்சி தெருவை சேர்ந்த சுபாஷ் என்கிற ஜான்பால் (30), ஜான் கபோர்டு (37), ஜெனிபர் (32),மகேஷ் (35) மற்றும் ஒருவர் சேர்ந்து கொலைவெறி தாக்குதல் நடத்தினர். இதில் படுகாயம் அடைந்த சுரேஷ்குமார் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நிலையில் இறந்தார். தொடர்ந்து கருங்கல் போலீசார் கொலை வழக்காக மாற்றி தனிப்படை அமைத்து குறைவாளைகளை தேடி வந்தனர். இதில் குற்றம் சாட்டப்பட்ட 2-ம் நபர் ஆன ஜான் கபோர்ட் கொல்லங்கோடு பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டார். பின்னர் அவர் கொடுத்த தகவலின் பெயரில் ஐந்தாவது நபரான சுரேஷ் ராஜன் என்பவரை போலீசார் கைது செய்தனர். இதை தொடர்ந்து நாலாவது நபராக சேர்க்கப்பட்டிருந்த மகேஷ் கடந்த 5. தினங்களுக்கு முன்பு இரணியல் நீதிமன்றத்தில் சரணடைந்தார். கருங்கல் போலீஸ் நிலையம் அருகே வசித்து வரும் அனிஷ் என்பவர் கருங்கல் போலீசில் சரணடைந்தார். இந்த நிலையில் போலீசார் தேடி வந்த முதல் நபரான கருங்கல் ஆர்சி தெரு பகுதி சுபாஷ் என்கிற ஜான் பால் கருங்கல் போலீசுக்கு ஒரு மாதமாக டிமிக்கி கொடுத்து வந்த நிலையில் தற்போது நாகர்கோவில் நீதிமன்றத்தில் சரண் நடத்துள்ளார். இவரை போலீஸ் கஸ்டடியில் எடுத்து விசாரிக்க கருங்கல் போலீசார் இரணியல் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.

Tags

Next Story