அணைக்கட்டு: திடீரென கீழே விழுந்த தேர்!

அணைக்கட்டு: திடீரென கீழே விழுந்த தேர்!

கீழே விழுந்த தேர்

பொற்கொடி அம்மன் திருவிழாவில் தோளிலிருந்து திடீரென கீழே விழுந்த தேரால் பரபரப்பு ஏற்பட்டது.

ஒடுகத்தூர் அருகே பொற்கொடி அம்மன் ஏரி கோயில் புஷ்பராக தேர் திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் அம்மனை தரிசனம் செய்து தங்களுடைய நேர்த்திக்கடன்களை செலுத்தினர். இதனை அடுத்து ஊர் பகுதிகளில் ஊர்வலமாக சுற்றி ஏரி பகுதிக்கு வந்த தேரானது மூலஸ்தானம் அடைந்தது.

பின்பு மீண்டும் ஊர்வலம் செல்ல தயாரான நிலையில் தேரை தனது தோளின் மீது தூக்கி பக்தர்கள் திடீரென கை தவறி கீழே விழுந்தது. இதன் அடியில் இருந்த பக்தர்கள் சிறு காயங்களுடன் உயிர்த்தப்பினர். இதனையடுத்து தேர் ஊர்வலம் செல்ல மீண்டும் தயார் நிலைக்கு எடுத்துச் செல்லப்பட்டது. அப்போது தேர் செல்லாமல் தேரின் சக்கரங்கள் சேற்று சகதியில் சிக்கிக் கொண்டது.

பின்னர், 3 டிராக்டர்களை கொண்டு சுமார் அறை மணி நேரம் போராடி தேரை கயிறு கட்டி இழுத்துச் சென்றனர்.

Tags

Read MoreRead Less
Next Story