தேர் திருவிழா- ஜெயங்கொண்டம் எம்எல்ஏ பங்கேற்பு

தேர் திருவிழா- ஜெயங்கொண்டம் எம்எல்ஏ பங்கேற்பு

தேர் திருவிழா- ஜெயங்கொண்டம் எம்எல்ஏ பங்கேற்பு 

உலக பிரசித்தி பெற்ற திருக்கோவிலில் தேர் திருவிழா - ஜெயங்கொண்டம் எம்எல்ஏ கண்ணன் கலந்து கொண்டு தேர் திருவிழாவை தொடக்கி வைத்தார்.
அரியலூர் மாவட்டம் கங்கைகொண்ட சோழபுரத்தில் உலக பிரசித்திபெற்ற பிரகதீஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது. இந்த திருக்கோவிலின் மாசிமக திருவிழா கடந்த 15 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனையடுத்து தினந்தோறும் சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாரதணை நடைப்பெற்று வந்தது. இந்நிலையில் முக்கிய நிகழ்வான தேர் திருவிழா இன்று நடைப்பெற்றது. இதில் ஜெயங்கொண்டம் எம்எல்ஏ கண்ணன் கலந்து கொண்டு தேரை வடம்பிடித்து இழுத்து தேர் திருவிழாவை தொடக்கி வைத்தார். இதில் ஜெயங்கொண்டம் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

Tags

Next Story