தேர் கவிழ்ந்த விபத்து அமைச்சர் நிவாரண உதவி!

மாத்துார் ராமசாமிபுரத்தில் முத்துமாரியம்மன் கோயில் தேர் கட்டுமான பணி யின்போது கவிழ்ந்ததில் அதே பகுதியை சேர்ந்த நபர் உயிரிழந்தார்.

அறந்தாங்கி அருகே உள்ள மாத்துார் ராமசாமிபுரத்தில் முத்துமாரியம்மன் கோயில் தேர் கட்டுமான பணி யின்போது கவிழ்ந்ததில் அதேபகுதியை சேர்ந்தமகாலிங்கம் (70) என்பவர் உயிரிழந்தார். மேலும் 5 பேருக்கு காயம்ஏற் பட்டது. இதையடுத்து உயிரிழந்தவரின் குடும்பத்துக்குரூ. 2 லட்சம், காயமடைந்தவர்க ளுக்கு ரூ. 50 ஆயிரத்தை முதல்வரின்பொது நிவாரண நிதியில் இருந்து வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டார்.

அதன்படி உயிரிழந்த மகாலிங்கம் குடும்பத்தினரை சுற்றுச்சூழல் துறைஅமைச்சர் மெய்யநாதன் நேற்று சந்தித்து ரூ.2 லட்சத்துக்கானகாசோலை மற்றும் காயமடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரத் துக்கான காசோலையை வழங்கினார். அதேபோல் ஆலங்குடி மின்வாரிய அலுவலகத்தில் பணிபுரிந்து உயிரிழந்த நரியன் கொல்லையை சேர்ந்த மணி, நெம்மக்கோட்டை கணேஷ் நகரை சேர்ந்த குமார் ஆகியோரின் வாரிசுதாரர்களுக்கு கள உதவியாளருக்கான பணி நியமன ஆணைகளை அமைச்சர் வழங்கினார். மின்வாரிய செயற்பொறியாளர் நடராஜன், வல்லத்திராக்கோட்டை உதவி மின் பொறியாளர் பிரகாஷ் உட்பட பலர் உடனிருந்தனர்.

Tags

Next Story