ஏம்பலில் 23ம் தேதி தேரோட்டம்

ஏம்பலில் 23ம் தேதி தேரோட்டம்
புதுக்கோட்டை மாவட்டம், ஏம்பல் முத்தையா சுவாமி கோயிலில் மாசி திருவிழாவை முன்னிட்டு தேரோட்டம் வருகின்றன 23ம் தேதி நடைபெற உள்ளது.
திருமயம்: அரிமளம் அருகே ஏம்பல் முத்தையா சுவாமி கோயிலில் மாசி திருவிழா கடந்த 15ம் தேதி காப்புக்கட்டும் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. இதை தொடர்ந்து சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் செய்யப்பட்டது. இதன்பின்பு உற்சவர் அலங்கரிக்கப்பட்ட மயில்வாகனத்தில் வீதி உலா வந்தார். முக்கிய விழாவான தேர்திருவிழா வரும் 23 ம்தேதி நடக்கிறது. விழாவை முன்னிட்டு இரவு இசை,நாடக நிகழ்ச்சிகள் நடக்கின்றன.

Tags

Next Story