இலஞ்சி குமாரர் கோவிலில் நாளை சித்திரை திருவிழா தேரோட்டம்

இலஞ்சி குமாரர் கோவிலில் நாளை சித்திரை திருவிழா தேரோட்டம்
இலஞ்சி குமாரர் கோவிலில் நாளை சித்திரை திருவிழா தேரோட்டம்
தென்காசி மாவட்டம், இலஞ்சி குமாரர் கோவிலில் நாளை சித்திரை திருவிழா தேரோட்டம் நடைபெற உள்ளது.

தென்காசி அருகே உள்ள இலஞ்சி குமாரர் கோவிலில் கடந்த 14ஆம் தேதி சித்திரைத் திருவிழா தேரோட்டம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து ஒவ்வொரு நாளும் காலை மாலை நேரங்களில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாரனை நடைபெற்று வருகிறது. இன்று காலை நடராஜ மூர்த்திக்கு பச்சை சாத்தி தாண்டவத் தீபாரதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு நடத்தினர்.

இந்நிலையில் நாளை 22ஆம் தேதி காலை 9 மணிக்கு தேரோட்டம் நடைபெறுகிறது. அலங்கரிக்கப்பட்ட தேரில் சுவாமி எழுந்தருள்கிறார். மேள தாளங்கள் முழங்க தேரை பக்தர்கள் வடம் பிடித்து இழுத்துச் செல்கின்றனர். 23ஆம் தேதி தீர்த்தவாரி நடக்கிறது. அத்துடன் சித்திரை திருவிழா நிறைவு பெறுகிறது.

Tags

Next Story