சதுரகிரி கோயிலுக்கு செல்ல தடை - பக்தர்கள் காத்திருப்பு

சதுரகிரி கோயிலுக்கு செல்ல தடை - பக்தர்கள் காத்திருப்பு
 பக்தர்கள் காத்திருப்பு

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே வத்திராயிருப்பு மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் பெய்த கனமழை காரணமாக சதுரகிரி கோயிலுக்கு செல்லும் ஓடைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலுக்கு பிரதோஷம் மற்றும் அமாவாசையை முன்னிட்டு கடந்த 10 தேதி முதல் 14 ஆம் தேதி வரை பக்தர்கள் கோயிலுக்கு செல்ல வனத்துறை தடை விதித்துள்ளது. இன்று அமாவாசையை முன்னிட்டு நூற்றுக்கணக்கான பக்தர்கள் கோயிலுக்கு வருகை தந்த நிலையில் கோவிலுக்கு செல்ல வனத்துறையினரால் அனுமதி மறுக்கப்பட்டுள்ளதால் ஏமாற்றத்துடன் வாயிலின் முன்பு பக்தர்கள் காத்திருக்கின்றனர்.

Tags

Next Story