புதிய ஊராட்சி மன்ற அலுவலகத்தை திறந்து வைத்த எம் எல் ஏ !

புதிய ஊராட்சி மன்ற அலுவலகத்தை திறந்து வைத்த எம் எல் ஏ !
புதிய ஊராட்சி மன்ற அலுவலம்
புதிய ஊராட்சி மன்ற அலுவலகத்தை செங்கல்பட்டு சட்டமன்ற உறுப்பினர் வரலட்சுமி மதுசூதனன் திறந்து வைத்தார்.
செங்கல்பட்டு மாவட்டம் ,காட்டாங்கொளத்தூர் தெற்கு ஒன்றியத்தில் உள்ள காயரம்பேடு ஊராட்சியில் 2021-2022-ம் ஆண்டு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ. 22 லட்சத்து 65 ஆயிரம் மதிப்பில் புதிய ஊராட்சி மன்ற அலுவலகத்தை செங்கல்பட்டு சட்டமன்ற உறுப்பினர் வரலட்சுமி மதுசூதனன் திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் காட்டாங்குளத்தூர் தெற்கு ஒன்றிய செயலாளர் ஆப்பூர் சந்தானம், காட்டாங்குளத்தூர் ஒன்றிய குழு தலைவர் உதயா கருணாகரன், காயரம்பேடு ஊராட்சி மன்ற தலைவர், துணைத் தலைவர் ,வார்டு உறுப்பினர்கள், பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டனர்.

Tags

Next Story