செங்கோட்டை: வெறி நாய் கடித்து ஆடுகள் உயிரிழப்பு

செங்கோட்டை:  வெறி நாய் கடித்து ஆடுகள் உயிரிழப்பு
ஆடுகள் உயிரிழப்பு
வடகரை அருகே பட்டியில் கட்டப்பட்டிருந்த ஆடுகளை வெறிநாய் கடித்ததில் 4 ஆடுகள் உயிரிழந்தன.
தென்காசி மாவட்டம் வடகரை பேரூராட்சிக்கு உட்பட்ட வா வா நகர் மேல தெருவே பகுதியை சேர்ந்த முகமது இஸ்லாம் மைதீன் சொந்தமான தொழுவத்தில் ஆடுகளை கட்டிவிட்டு நேற்று இரவு வீட்டுக்கு வந்துள்ளார். இந்த நிலையில் காலையில் வந்து பார்த்தபோது வெறி நாய்கள் கடித்து 4 ஆடுகள் உயிரிழந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வந்து பார்வையிட்டு வெறி நாய்களைப் பிடித்து அப்புறப்படுத்த வேண்டும் என கோரிக்கை வைத்தனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story