சென்னை: இ-மெயில் மூலம் வந்த வெடிகுண்டு மிரட்டலால் பரபரப்பு

தனியார் வணிக வளாகத்திற்கு இ-மெயில் மூலம் வந்த வெடிகுண்டு மிரட்டலை தொடர்ந்து போலீசார் மோப்ப நாய்களை கொண்டு சோதனை மேற்கொண்டனர்.
சென்னை கோயம்பேடு மேம்பாலம் அருகே உள்ள தனியார் மாலுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இமெயில் மூலம் வந்த மிரட்டலை தொடர்ந்து திருமங்கலம் போலீசார் உடனடியாக விரைந்து சென்று சோதனை மோப்ப நாய்களை கொண்டு சோதனைகளை மேற்கொண்டனர். வெடிகுண்டு நிபுணர்களும் சோதனைகளை மேற்கொண்டனர்.

Tags

Next Story