கோழிக்கழிச்சல் நோய் தடுப்பூசி முகாம்

கோழிக்கழிச்சல் நோய் தடுப்பூசி முகாம்

ஆட்சியர் கற்பகம் 

பெரம்பலூர் மாவட்டத்தில் இன்று முதல் வரும் 14-ம் தேதி வரை கால்நடை பராமரிப்புத் துறையின் மூலம் கோழிக்கழிச்சல் நோய் தடுப்பூசிப்பணி முகாம் நடைபெறுவதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
பெரம்பலூர் மாவட்ட கால்நடை பராமரிப்புத்துறையின் மூலம் ஆண்டுதோறும் பிப்ரவரி மாதம் கோழிக்கழிச்சல் நோய் தடுப்பூசிப்பணி இருவார முகாம் நடத்தப்பட்டு வருகிறது. இந்தாண்டும் பிப்ரவரி - 1 ம் தேதி முதல் பிப்ரவரி -14 ம் தேதி வரை இருவாரங்கள் கோழிகளுக்கு கோழிக்கழிச்சல் நோய் தடுப்பூசிப்பணி இருவார முகாம் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து கால்நடை மருந்தகங்களுக்குட்பட்ட கிராமங்களில் நடைபெறவுள்ளது. இந்த முகாமில் 8 வாரம் மற்றும் அதற்கு மேற்பட்ட அனைத்து கோழிகளுக்கும் இந்த தடுப்பூசிப்பணி இலவசமாக மேற்கொள்ளப்படவுள்ளது. எனவே அனைத்து கோழி வளர்ப்போர், பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் இம்முகாமில் கலந்துகொண்டு தங்கள் கோழிகளுக்கு தடுப்பூசி போட்டு பயன்பெற வேண்டுமென மாவட்ட ஆட்சித்தலைவர் கற்பகம் தகவல் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story