கோவையில் திருவள்ளுவர் சிலையை திறந்து வைக்கும் முதல்வர்

கோவையில் திருவள்ளுவர் சிலையை  திறந்து வைக்கும் முதல்வர்

எழுத்துக்களால் வடிவமைக்கப்பட்டுள்ள வள்ளுவர் சிலை

கோவையில் திருவள்ளுவர் சிலையை தமிழக முதல்வர் காணொளி வாயிலாக திறந்து வைக்கவுள்ளார்.

கோவை மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல்வேறு பணிகள் நடைபெற்று வருகிறது. குறிப்பாக மாநகராட்சி பகுதியில் உள்ள ஏழு குளங்கள் சீரமைக்கப்பட்டு குளக்கரைகளில் பொழுதுபோக்கு அம்சங்கள் ஏற்படுத்தபட்டு வருகிறது.

இதன் ஒரு பகுதியாக பொள்ளாச்சி சாலையில் உள்ள குறிச்சி குளம் பகுதியில் ஸ்மார்ட் சிட்டி பணிகள் நடைபெற்று வருகிறது.இதில் தமிழ் எழுத்துகளை கொண்டு சுமார் 2.5 டன் எடையில் 20 அடி உயரத்தில் திருவள்ளுவர் சிலை அமைக்கப்பட்டுள்ளது.

பொதுமக்களை ஈர்க்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள இந்த திருவள்ளுவர் சிலையை நாளை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் திறந்து வைக்கிறார். திருவள்ளூவர் சிலை திறப்பை முன்னிட்டு மற்றும் குளத்தினை சுற்றியுள்ள பகுதிகளில் பராமரிப்பு பணிகளை மாநகராட்சி ஊழியர்கள் செய்து வருகின்றனர்.

Tags

Next Story