நாகையில் மக்களுடன் முதல்வர் திட்டம்

நாகையில் மக்களுடன் முதல்வர் திட்டம்

மாவட்ட ஆட்சியர் 

நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியரகத்தில் முதலமைச்சரின் மக்களுடன் முதல்வர் திட்டம் 16ஆம் தேதி அன்று நடைபெறவுள்ளது.

நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியரகத்தில் மாண்புமிகு முதலமைச்சரின் மக்களுடன் முதல்வர் திட்டம் 16.02.2024 அன்று நடைபெறவுள்ளது மாவட்ட ஆட்சித்தலைவர் .ஜான் டாம் வர்கீஸ்,தகவல் மாண்புமிகு முதலமைச்சரின் மக்களுடன் முதல்வர் திட்டம் தமிழ்நாடு முழுவதும் நடைபெற்றதில்,

மேற்படி முகாமில் வரப்பெற்ற பல்வேறு துறைச் சார்ந்த (13 துறைகள்) மனுக்கள் தீரவு காணப்பட்டு, நலத்திட்ட உதவிகள் வழங்கிட தகுதியான இனங்கள் கண்டறியப்பட்டு 16.02.2024 அன்று தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் சென்னை கலைவாணர் அரங்கில் காலை 10.30 மணியளவில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற உள்ளது.

பெறப்பட்ட மொத்த மனுக்கள் 3466-ல் ஏற்பளிக்கப்பட்ட 2787 தகுதியான பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வ கும் விழ நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலக முதன்மை மாநாட்டு கூட்டரங்கில் 16.2.2024 காலை 10.00 மணியளவில் தொடங்கி நடைபெறவுள்ளது. மேற்படி விழாவில் பொதுமக்கள் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Tags

Next Story