மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்

மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்

 திருவாரூரில் மக்களுடன் முதல்வர் திட்டத்தின் கீழ் நடந்த முகாமில் மனுக்கள் பெறப்பட்டன.  

திருவாரூரில் மக்களுடன் முதல்வர் திட்டத்தின் கீழ் நடந்த முகாமில் மனுக்கள் பெறப்பட்டன.
திருவாரூர் மாவட்டத்தில் மக்களுடன் முதல்வர் திட்டத்தின் கீழ் திருவாரூர் நகராட்சிக்குட்பட்ட பகுதியில் உள்ள சாந்தி திருமண மண்டபத்தில் மக்களுடன் முதல்வர் திட்டத்தின் கீழ் மனுக்கள் பெறப்படுவதை கூடுதல் ஆட்சியர் ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குனர் பிரியங்கா பார்வையிட்டார் . தமிழ்நாட்டில் அரசின் சேவைகள் பொதுமக்களை விரைவாகவும் ,எளிதாகவும் சென்று சேர்ந்திட வழிவகுக்கும் மக்களுடன் முதல்வர் என்ற புதிய திட்டத்தை தமிழக முதல்வர் இன்று கோயம்புத்தூரில் தொடங்கி வைத்தார் . இதனை தொடர்ந்து திருவாரூரில் பொதுமக்கள் தங்கள் கோரிக்கைகளை சம்பந்தப்பட்ட துறையினரிடம் தெரிவித்திடும் வகையில் அனைத்து துறையினரும் ஒரே இடத்தில் முகாமிட்டு கோரிக்கைகளைப் பெற்று அதற்கான தீர்வினை வழங்கிட ஏதுவாக இந்த முகாம் நடைபெறுகிறது. பொதுமக்கள் தங்களது கோரிக்கைகளை மனுக்களாக காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை முகாம் நடைபெறும் இடத்தில் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கினர்.

Tags

Next Story