மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்

மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்

சேலம் மாவட்டத்தில் நாளை மறுதினம், மக்களுடன் முதல்வர் திட்ட சிறப்பு முகாம் 9 இடங்களில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சேலம் மாவட்டத்தில் நாளை மறுதினம், மக்களுடன் முதல்வர் திட்ட சிறப்பு முகாம் 9 இடங்களில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சேலம் மாவட்டத்தில் வரும் 27ம் தேதி, மக்களுடன் முதல்வர் திட்ட சிறப்பு முகாம் 9 இடங்களில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் வருவாய்த்துறை, நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி உள்பட 13 துறைகளின் சேவைகளை ஒரே இடத்தில் பெறும் வகையில், மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி வரும் 27ம் தேதியன்று, சூரமங்கலம் 22வது வார்டுக்கு சிவதாபுரம் மாநகராட்சி நடுநிலைப் பள்ளியிலும், அஸ்தம்பட்டி 29வது வார்டுக்கு தொங்கும் பூங்கா மண்டபத்திலும், அம்மாபேட்டை 36வது வார்டுக்கு எஸ்.கே.டவுன்ஷிப் விநாயகர் கோவில் திருமண மண்டபத்திலும், கொண்டலாம்பட்டி 52 வார்டுக்கு மணியனூர் மாநகராட்சி பள்ளியிலும் முகாம்கள் நடைபெறவுள்ளன. மேலும், நரசிங்கபுரம் நகராட்சியில் 11, 12, 13 ஆகிய வார்டுகளுக்கு ஏகம்பர் மூப்பர் திருமண மண்டபத்திலும், தாரமங்கலம் நகராட்சி 10, 11, 13, 17, 18 ஆகிய வார்டுகளுக்கு செங்குந்தர் திருமண மண்டபத்திலும், கன்னங்குறிச்சி பேரூராட்சி 9வது வார்டுக்கு முத்துசாமி தெரு கேஏடி திருமண மண்டபத்திலும் முகாம் நடக்கிறது. மல்லூர் பேரூராட்சி 12வது வார்டு மக்களுக்கு தண்ணீர் தொட்டி ரோடு அகர மஹால் திருமண மண்டபத்திலும், செட்டிச்சாவடி கிராம ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி வளாகத்திலும் என மொத்தம் 9 இடங்களில் சிறப்பு முகாம் நடக்கிறது.

Tags

Next Story