மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் - கலெக்டர் துவக்கி வைப்பு

மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் - கலெக்டர் துவக்கி வைப்பு
மக்களுடன் முதல்வர் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட குமரி மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர்.
பளுகல் பேரூராட்சியில் நடந்த மக்களுடன் முதல்வர் திட்ட முகாமை மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் துவக்கி வைத்தார்.
கன்னியாகுமரி மாவட்டம் பளுகல் பேரூராட்சிக்குட்பட்ட மணிவிளை சிவாஜி பொறியியல் கல்லூரியில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சித்தலைவர் பி.என்.ஸ்ரீதர், தலைமை வகித்து, குத்துவிளக்கேற்றினார். பத்மநாபபுரம் சார் ஆட்சியர் தஎச்.ஆர்.கௌசிக், முன்னிலை வகித்தார். தனித்துணை ஆட்சியார் (ச.பா.தி) குழந்தைசாமி, உதவி இயக்குநர் பேரூராட்சிகள் விஜய லெட்சுமி, விளவங்கோடு வட்டாசியர் குமாரவேல், பளுகல் பேரூராட்சி செயல் அலுவலர் (பொ) ரமாதேவி, பளுகல் பேரூராட்சி தலைவர் நிஜி, துணைத்தலைவர் ஜெயேந்திரன், அனைத்து துறை அலுவலர்கள், பேரூராட்சி உறுப்பினர்கள், பணியாளர்கள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story