மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்: மாவட்ட ஆட்சியர் ஆய்வு

மக்களுடன் முதல்வர்  திட்ட முகாம்: மாவட்ட ஆட்சியர் ஆய்வு

மாவட்ட ஆட்சியர் ஆய்வு

மக்களுடன் முதல்வர் பொது மக்களிடமிருந்து மனுக்களை பெறும் முகாமிற்கான முன்னேற்பாடு பணிகளை குறித்து மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி ஆய்வு செய்தார்.

தர்மபுரி நகராட்சி, மதிகோண்பாளையம், திருமண மண்டபத்தில் நடைபெற உள்ள ”மக்களுடன் முதல்வர்” பொது மக்களிடமிருந்து மனுக்களை பெறும் முகாமிற்கான முன்னேற்பாடு பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் கி.சாந்தி இன்று (16.12.2023) ஆய்வு மேற்கொண்டார்.

உடன் மாவட்ட வருவாய் அலுவலர் செ. பால்பிரின்ஸ்லி ராஜ்குமார், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தடங்கம்.பெ.சுப்பிரமணி, தருமபுரி நகர்மன்றத் தலைவர் இலட்சுமி நாட்டான் மாது, தருமபுரி வருவாய் கோட்டாட்சியர் கீதாராணி, தனித்துணை ஆட்சியர் (சபாதி) திரு.சையது ஹமீத், உதவி இயக்குநர் (பேரூராட்சிகள்) ர.குருராஜன், தர்மபுரி நகராட்சி ஆணையாளர் திரு.சோ.புவனேஷ்வரன், தர்மபுரி வட்டாட்சியர் ஜெயசெல்வம் உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் உள்ளனர்.

Tags

Next Story