மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் - மேயர் துவக்கி வைப்பு

மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் - மேயர் துவக்கி வைப்பு

மக்களுடன் முதல்வர் திட்டம் 

சேலம் மாநகராட்சி 11 வார்டு பகுதியில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாமை மேயர் ராமச்சந்திரன் தொடங்கி வைத்தார்
சேலம் மாநகராட்சி அம்மாபேட்டை மண்டலம் 11-வது வார்டு தில்லைநகர் பொன் கணபதி வழிபாட்டு மண்டபத்தில் 'மக்களுடன் முதல்வர்' முகாம் நடைபெற்றது. மேயர் ராமச்சந்திரன் தொடங்கி வைத்தார். தொடர்ந்து அந்த வார்டு பகுதி மக்களிடம் கோரிக்கை அடங்கிய மனுக்களை பெற்றார். பின்னர் மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அலுவலர்களிடம் கேட்டுக்கொண்டார். முகாமில் உதவி ஆணையாளர் வேடியப்பன், கவுன்சிலர்கள் இந்துஜா, தெய்வலிங்கம் மற்றும் வார்டு மக்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story