சங்கராபுரத்தில் மக்களுடன் முதல்வர் திட்ட சிறப்பு முகாம்

சங்கராபுரத்தில் மக்களுடன் முதல்வர் திட்ட சிறப்பு முகாம்

மக்களுடன் முதல்வர் திட்டம்

சங்கராபுரம் பேரூராட்சியில் 'மக்களுடன் முதல்வர்' திட்ட சிறப்பு முகாம் நடந்தது.
சங்கராபுரம் பேரூராட்சி சார்பில் 'மக்களுடன் முதல்வர்' திட்ட சிறப்பு முகாம் நேற்று நடந்தது. தனித் துணை கலெக்டர் ராஜலட்சுமி தலைமை தாங்கினார். பேரூராட்சி செயல் அலுவலர் சம்பத்குமார், பேரூராட்சித் தலைவர் ரோஜாரமணி, துணைத் தலைவர் ஆஷாபீ முன்னிலை வகித்தனர். இளநிலை உதவியாளர் ஜெயபிரகாஷ் வரவேற்றார். முகாமை உதயசூரியன் எம்.எல்.ஏ. துவக்கி வைத்துப் பேசியதாவது, சங்கராபுரம் பேரூராட்சி பகுதியில் வசிக்கும் பொது மக்கள் தங்கள் பிரச்னைகளை மனுக்களாக சம்பந்தப்பட்ட துறையினருக்கு நேரடியாக கொடுத்து தீர்வுகாண வலியுறுத்தினார்.

Tags

Next Story