பெரம்பலூரில் மக்களுடன் முதல்வர் திட்ட சிறப்பு முகாம்: ஆட்சியர் ஆய்வு

பெரம்பலூரில் மக்களுடன் முதல்வர் திட்ட சிறப்பு முகாம்:  ஆட்சியர் ஆய்வு

ஆய்வு செய்யும் ஆட்சியர்

பெரம்பலூரில் மக்களுடன் முதல்வர் திட்ட சிறப்பு முகாமினை ஆட்சியர் ஆய்வு செய்தார்.

பெரம்பலூர் மாவட்டம் லெப்பைக்குடிக்காடு பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள பொதுமக்கள் பயன்பெறும் வகையில் லெப்பைக்குடிக்காடு, மெயின் ரோடு, கிழக்கு பள்ளிவாசல் மஹாலில்மக்களுடன் முதல்வர் திட்டத்தின் கீழ் நடைபெற்ற சிறப்பு முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் கற்பகம் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

மக்களுடன் முதல்வர் திட்டத்தின் கீழ் மக்களின் கோரிக்கைகள் தொடர்பாக பெறப்படும் மனுக்கள் அனைத்தும் சம்பந்தப்பட்ட துறைகளால் 30 தினங்களுக்குள் உரிய முறையில் பரிசீலனை செய்யப்பட்டு தகுதியின் அடிப்படையில் உரிய சேவைகள் மக்களுக்கு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.


Tags

Next Story