பட்டணம் பேரூராட்சி பகுதியில் “மக்களுடன் முதல்வர்” திட்ட முகாம்

ராசிபுரம் அருகே பட்டணம் பேரூராட்சி பகுதியில் “மக்களுடன் முதல்வர்” திட்ட முகாம்
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த பட்டணம் பேரூராட்சி ரங்கசாமி திருமண மண்டபத்தில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் நடைபெற்றது. பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் கே.ஆர்.என்.இராஜேஸ்குமார் முகாமை பார்வையிட்டு பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார். மக்களுடன் முதல்வர் சிறப்பு முகமானது நாமக்கல் மாவட்டத்தில் 39 இடங்களில் நடத்தப்படும் என்று திட்டமிடப்பட்டு இதுவரை 23 முகாம்கள் சிறப்பாக நடைபெற்று முடிந்திருக்கிறது. நாமக்கல் நகராட்சி, இராசிபுரம் நகராட்சி, திருச்செங்கோடு நகராட்சி, பள்ளிபாளையம் கொமாரபாளையம் ஆகிய 5 நகராட்சிகளில் அங்கு இருக்கின்ற மக்கள் தொகை அடிப்படையில், வார்டு அடிப்படையில் பல்வேறு கட்டங்களாக மக்களுடன் முதல்வருக்கான சிறப்பு திட்ட முகாம் நடைபெற்று வருகிறது. மேலும் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 18 பேரூராட்சிகளிலும் இந்த முகாம் சிறப்பாக நடைபெற்று வருகின்றன. இதுவரை நடந்த முகாம்களில் 2,923 பொதுமக்களிடமிருந்து பெறப்பட்டு அது முறையாக பதிவு செய்யப்பட்டுள்ளன. 1,753 மனுக்கள் நகராட்சி அளவிலும் பேரூராட்சி பகுதியில் 1,170 மனுக்களும் பெறப்பட்டு பதிவு செய்யப்பட்டு இருக்கிறது. இம்முகாமுக்கு வருகின்ற மனுக்கள் துறைவாரியாக ஒரு இடத்திலே அது பிரிக்கப்பட்டு பதிவு செய்யப்படும். அவர்களுக்கு ஒரு டோக்கன் வழங்கப்பட்டு பின்னர் பிரத்யோகமாக உருவாக்கப்பட்டுள்ள இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட உள்ளது. பிறகு சம்பந்தப்பட்ட துறைகளுக்கு அந்த மனுக்கள் அனுப்பப்பட்டு தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் கே.ஆர்.என்.இராஜேஸ்குமார் தெரிவித்தார்.

Tags

Next Story