மக்களுடன் முதல்வர் திட்ட சிறப்பு முகாம்

மக்களுடன் முதல்வர் திட்ட சிறப்பு முகாம்

மக்களிடம் மனுக்கள் பெற்ற அமைச்சர் சிவசங்கர் 

மக்களுடன் முதல்வர் திட்ட மனுக்கள் பெறும் சிறப்பு முகாமினை தமிழக முதல்வர் முக.ஸ்டாலின் நேற்று கோவையில் தொடங்கி வைத்தார். இதனையொட்டி அரியலூர் நகராட்சி அலுவலகத்தில் இத்திட்டத்தை தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தொடங்கிவைத்து பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்று கொண்டார். பின்னர் அந்த மனுக்கள் மீது உரிய தீர்வு காண அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். பின்னர் 2 பேருக்கு பட்டா ஆணைகளும், ஒரு நபருக்கு பிறப்பு சான்றிதழையும் வழங்கினார். இதில் மாவட்ட ஆட்சியர் ஆனிமேரி ஸ்வர்ணா, அரியலூர் சட்டமன்ற உறுப்பினர் சின்னப்பா, அரியலூர் நகர்மன்ற தலைவர் சாந்தி கலைவாணன் மற்றும் அரசுதுறை அதிகாரிகள், நகர்மன்ற உறுப்பினர்கள், பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story