அரியாக்கவுண்டம்பட்படியில் 'மக்களுடன் முதல்வர்' திட்ட முகாம்

அரியாக்கவுண்டம்பட்படியில்  மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்

மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் 

சேலம் மாநகராட்சி சூரமங்கலம் மண்டலம் 21 - வது வார்டுக்கு உட்பட்ட அரியாகவுண்டம்பட்டி மாநகராட்சி நடுநிலை பள்ளியில் மக்களுடன் முதல்வர் திட்ட குறைதீர்க்கும் முகாம் நேற்று நடைபெற்றது. இந்த முகாமில் சேலம் மேற்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினர் இரா.அருள் கலந்து கொண்டார், இந்தப்பகுதியை சேர்ந்த 100 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு புதிய மின் இணைப்பு, சாலை வசதி, சாக்கடை வசதி, பட்டா மாற்றம், உதவி தொகை, உரிமை தொகை,மின் இணைப்பு பெயர் மாற்றம் , சாலையோர வியாபாரிகள் அடையாள அட்டை வழங்குதல் உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை அருள் எம்எல்ஏ விடம் கொடுத்தனர்.

இந்த மனுக்களைப் பெற்றுக் கொண்டு ஒவ்வொன்றையும் பரிசீலனை செய்து உடனடியாக தீர்வு காணப்படும் என பொதுமக்களிடம் உறுதியளித்தார். இந்த முகாமில் சேலம் மேற்கு தாசில்தார் (பொறுப்பு) ஈஸ்வரி, மாநகராட்சி உதவி பொறியாளர் முருகன், பகுதி செயலாளர் சமயவேல், கோட்ட செயலாளர் சம்பத் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story