முதலமைச்சர் பிறந்த நாள்: பிராத்தனை செய்த மாற்றுத்திறனாளிகள்

முதலமைச்சர் பிறந்த நாள்: பிராத்தனை செய்த மாற்றுத்திறனாளிகள்
மாற்றுத்திறனாளிகளுக்கு உணவு வழங்கல்
முதலமைச்சர் பிறந்த நாளில் மனம் நிறந்த வாழ்த்துக்களை தெரிவித்து பிராத்தனை மாற்றுத்திறனாளிகள் செய்தனர்.

திமுக கழக தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு திருவள்ளூர் மத்திய மாவட்ட திமுக சார்பில் வேப்பம்பட்டு பகுதியில் உள்ள மன வளர்ச்சிக்குன்றியோர் மற்றும் அதனை சார்ந்த குறைபாடுகள் உள்ளவர்களுக்கான மறுவாழ்வு இல்லத்தில் உள்ள 130 மாற்றுத்திறனாளிகளுக்கு திருவள்ளூர் மத்திய மாவட்ட பொருளாளர் ப.நரேஷ்குமார் ஏற்பாட்டில் ஒன்றிய செயலாளர் பிரேம் ஆனந்த் தலைமையில் அறுசுவை உணவுகாள் வழங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியின் துவக்கத்தில் கழக தலைவரும் முதலமைச்சருமான தளபதி அவர்களின் பிறந்தநாளை வாழ்த்தும் விதமாக மாற்றுத்திறனாளிகள் அனைவரும் மிகுந்த உற்சாகத்துடன் வாழ்த்துப்பாடலை பாடியும், பிராத்தனையும் மேற்க்கொண்டனர்.

Tags

Next Story