சத்தியமங்கலம் அருகே முதலமைச்சரின் காலை உணவு திட்டம் !

சத்தியமங்கலம் அருகே முதலமைச்சரின் காலை உணவு திட்டம்  !

ஈரோடு 

சத்தியமங்கலம் அருகே முதலமைச்சரின் காலை உணவு திட்டம் கஸ்தூரியா அரசு நிதி உதவி துவக்கப்பள்ளி நடைபெற்றது.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றியம் ராஜன்நகர் ஊராட்சி முதலமைச்சரின் காலை உணவு திட்டம் கஸ்தூரியா அரசு நிதி உதவி துவக்கப்பள்ளி இன்று 15/7/2024 கஸ்தூரியா அரசு நிதி உதவி துவக்கப்பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தை நமது சத்தி ஊராட்சி ஒன்றிய குழு பெருந் தலைவரும் சத்தி தெற்கு ஒன்றிய செயலாளருமான கேசிபி இளங்கோ அவர்கள் தலமை தாங்கி தொடங்கி வைத்தார்.

இதில் வட்டார வளர்ச்சி அலுவலர் விஜயலட்சுமி (வ ஊ) வட்டார வளர்ச்சி கல்வி அலுவலர் தேவகி சத்தி ஒன்றிய குழு துணை தலைவர் சுப்புலட்சுமி சுப்ரமணியம் ராஜன்நகர் ஊராட்சி மன்ற தலைவர் சந்திரமணி செல்வன் ஆகியோர்களின் முன்னிலையில் நடைபெற்றது துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பூபதி மற்றும் கஸ்தூரியா துவக்கப்பள்ளி செயலர் லலிதா கோவிந்தராஜிலு மற்றும் தலைமை ஆசிரியர்கள் செல்வராஜ் ஜெயக்குமார் ஹேமாவதி மற்றும் ஆசிரியர் பெருமக்கள் ஊர் கவுண்டர் வெங்கடாசலம் சி ஆர் செல்வராஜ் மற்றும் குழந்தை செல்வங்கள் கலந்து கொண்டனர்

Tags

Next Story