சோழபுரம் பேரூராட்சியில் மக்களுடன் முதல்வர் முகாம் இடமாற்றம் 

சோழபுரம் பேரூராட்சியில் மக்களுடன் முதல்வர் முகாம் இடமாற்றம் 
ஆட்சியர் தீபக் ஜேக்கப்
சோழபுரம் பேரூராட்சியில் மக்களுடன் முதல்வர் முகாம் இடமாற்றம்  செய்யப்பட்டுள்ளது.

சோழபுரம் பேரூராட்சியில் மக்களுடன் முதல்வர் முகாம் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட இடத்தில் இருந்து, வேறு இடத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இது குறித்து தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது, பொதுமக்கள் இணையவழி வாயிலாக தற்போது பெற்று வரும் சேவைகளை விரைவாகவும்,

பல்வேறு துறைகள் மூலம் பெற்று வரும் வெவ்வேறு சேவைகளை ஒரே இடத்திலும் பெறுவதற்கு, தமிழக முதலமைச்சரின் சீரிய வழிகாட்டுதலின்படி ”மக்களுடன் முதல்வர்” என்ற பெயரில் புதிதாக திட்டம் துவக்கப்பட்டு நடத்தப்பட்டு வருகிறது. இந்த சிறப்பு முகாம், தஞ்சாவூர் மாவட்டம், சோழபுரம் பேரூராட்சியில் டிச.23 சனிக்கிழமை அன்று சோழபுரம் கீழவீதியில் அமைந்துள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் நடத்திட தேர்வு செய்யப்பட்டிருந்தது.

இந்நேர்வில் தற்சமயம் நிர்வாக காரணங்களால் சோழபுரம் பேரூராட்சியில் அமைந்துள்ள ஜி.எஸ்.டி திருமண மண்டபத்தில் காலை 10 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை முகாம் நடத்திட உத்தேசிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் மேற்படி ஜி.எஸ்.டி திருமண மண்டபத்தில் நடைபெறும் முகாமில் கலந்து கொண்டு பயனடையுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் தீபக் ஜேக்கப் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story