மக்களுடன் முதல்வர் முகாம்: வட்டாட்சியர் துவக்கி வைத்தார்!

மக்களுடன் முதல்வர் முகாம்: வட்டாட்சியர் துவக்கி வைத்தார்!

மக்களுடன் முதல்வர் முகாம்:

நாசரேத்தில் மக்களுடன் முதல்வர் முகாமினை ஏரல் வட்டாட்சி யர் கோபாலகிருஷ்ணன் துவக்கி வைத்தார்.
தூத்துக்குடி மாவட்டம் நாசரேத் தேர்வு நிலை பேரூராட்சி நிர்வாகம் சார்பில் ஜோதி மஹாலில்நடத்தப்பட்ட மக்களுடன் முதல்வர் முகாமினை ஏரல் வட்டாட்சியர் கோபாலகிருஷ்ணன் பொது மக்களிடம் மனுக்கள் பெற்று துவக்கி வைத்தார்.முகாமில் குடிநீர் வழங்கல் துறை, பேரூராட்சி நிர்வாகம்,தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம் பாட்டுத் துறை தமிழ்நாடு அமைப்புசாராதொழிலாளர் நலவாரியங்கள், மாற்றுத் திறனாளிகள் நலத் துறை, உள்ளிட்ட துறைகளில் சம்பந்தமாக "சேவைகளுக்கான மனுக்கள் 636 மனுக்கள் பெறப்பட்டது. இம்மனுக்க ளுக்கு உடனடி தீர்வு காணப் பட்டது. இந்நிகழ்வில் நாசரேத் பேரூராட்சி செயல் அலுவலர் மகேஸ்வரன், தலைவர் நிர்மலா ரவி செல்வகுமார், முன்னாள்பேரூராட்சி தலை வர் ரவி செல்வக்குமார், பேரூராட்சி கவுன்சிலர்கள் ஐஜினஸ் குமார், சாமுவேல், ஜேம்ஸ், அனி ஜமீன் சால மோன்,ஸ்டெல்லா ஜம்பு, கிளாரா, ஜெயா,பத்ரகாளி, எட்வர்ட் கண்ணப்பா, ரவீந்திரன், பேருராட்சி துணைத் தலைவர் அருண் சாமுவேல், அதிசயமணி, பெனிட்ரோ, ரதி சந்திரன், செல்வக்குமார்,பௌத்ரம் மற்றும் வருவாய்த் துறை அலுவலர்கள் பேரூராட்சி துறை அலுவலர்கள், அனைத்து அரசுத்துறை அலுவலர்களும் கலந்து கொண்டனர்.

Tags

Next Story