மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் - மனுக்கள் பெற்ற எம்.எல்.ஏ

மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் - மனுக்கள் பெற்ற எம்.எல்.ஏ
மனுக்களை பெற்ற எம்.எல்.ஏ 

மக்களுடன் முதல்வர் திட்ட மனுக்கள் பெறும் சிறப்பு முகாமினை தமிழக முதல்வர் முக.ஸ்டாலின் நேற்று கோவையில் தொடங்கி வைத்தார். இதனையொட்டி அரியலூர் மாவட்டம் உடையார்பாளையத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைப்பெற்ற இந்த முகாமில் ஜெயங்கொண்டம் எம்எல்ஏ கண்ணன் கலந்து கொண்டு பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்று கொண்டார். பின்னர் அந்த மனுக்கள் மீது உரிய தீர்வு காண அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். இதில் பிற்படுத்தபட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் உமா மகேஸ்வரன், உடையார்பாளையம் பேரூராட்சி தலைவர் மலர்விழி ரஞ்சித்குமார் மற்றும் அரசுதுறை அதிகாரிகள், திமுக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.



Tags

Next Story