சேலம் அஸ்தம்பட்டியில் மக்களுடன் முதல்வர்' திட்ட சிறப்பு முகாம்

சேலம் அஸ்தம்பட்டியில் மக்களுடன் முதல்வர் திட்ட சிறப்பு  முகாம்
முகாமை ஆய்வு செய்த மேயர்
சேலம் அஸ்தம்பட்டியில் மக்களுடன் முதல்வர் திட்ட சிறப்பு முகாம் மேயர் ராமச்சந்திரன் பங்கேற்றார்.

சேலம் மாநகராட்சி அஸ்தம்பட்டி மண்டலம் 13-வது வார்டு சி.எஸ்.ஐ. பாலிடெக்னிக் கல்லூரியில் `மக்களுடன் முதல்வர்' திட்ட முகாம் நடந்தது. இதில் மேயர் ராமச்சந்திரன் கலந்து கொண்டு திட்ட முகாமை தொடங்கி வைத்தார்.

தொடர்ந்து வருவாய்த்துறை, நகராட்சி நிர்வாகம், மாற்றுத்திறனாளிகள், சமூக நலத்துறை, போலீஸ் துறை உள்பட 13 துறைகளுக்கான தனி அரங்குகள் அமைக்கப்பட்டு பொதுமக்களிடம் மனுக்கள் பெறப்பட்டன. இதில், பட்டா மாறுதல், பட்டா உட்பிரிவு, மின் இணைப்பு பெயர் மாற்றம், முதியோர் உதவித்தொகை என சுமார் 300-க்கும் மேற்பட்ட மனுக்கள் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்டன.

பின்னர் அந்த மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து தீர்வு காணுமாறு சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு மேயர் ராமச்சந்திரன் அறிவுறுத்தினார். இந்த நிகழ்ச்சியில் வார்டு கவுன்சிலர் ராஜ்குமார், 13-வது கோட்ட தி.மு.க.செயலாளர் ஷாநவாஸ், சேலம் மத்திய மாவட்ட சிறுபான்மையினர் அணி மாவட்ட துணை அமைப்பாளர் ஆரிப் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story