பரமத்தி வேலூரில் மக்களுடன் முதல்வர் சிறப்பு திட்ட முகாம்

பரமத்தி வேலூரில் மக்களுடன் முதல்வர் சிறப்பு திட்ட முகாம்

பரமத்தி வேலூரில் மக்களுடன் முதல்வர் சிறப்பு திட்ட முகாம்

பரமத்தி வேலூரில் மக்களுடன் முதல்வர் சிறப்பு திட்ட முகாம்

பரமத்தி வேலூரில் தமிழக முதல்வரின் முதன்மைத் திட்டமான மக்களுடன் முதல்வர் சிறப்புத் திட்ட முகாம் நடைபெற்றது. நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் பேரூராட்சிக்கு உட்பட்ட செல்லாண்டியம்மன் கோவில் திருமண மண்டபத்தில் மக்களுடன் முதல்வர் திட்ட சிறப்பு முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் 474 மனுக்கள் பொது மக்களால் அளிக்கப்பட்டது. பேரூராட்சி சார்ந்து 34 மனுக்கள் அளிக்கப்பட்டது.

சிறப்பு விருந்தினராக திமுக மேற்கு மாவட்ட செயலாளரும் ஜல்லிக்கட்டு பேரவை தலைவருமான மதுரா செந்தில் பங்கேற்றார். நிகழ்வில் துணை ஆட்சியர் பாலகிருஷ்ணன் தலைமையேற்றார். வேலூர் பேரூராட்சி தலைவர் லட்சுமி முரளி முன்னிலை வகித்தார். நிகழ்வில், காவல்துறை ஆய்வாளர் இந்திராணி, தாசில்தார் கலைச்செல்வி, மின்சார வாரிய உதவி பொறியாளர், கண்ணன் ஹார்டுவேர்ஸ் கண்ணன், நகர செயலாளர் முருகன், பேரூராட்சி கவுன்சிலர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர். இந்த முகாமில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களின் சந்தேகங்களுக்கு விளக்கங்களை கேட்டு அறிந்தனர்.

Tags

Next Story