முதலமைச்சா் மாநில இளைஞா் விருது : விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு

முதலமைச்சா் மாநில இளைஞா் விருது : விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு

ஆட்சியர் அருண்ராஜ் 

முதலமைச்சா் மாநில இளைஞா் விருதிற்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் வரும் மே.31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் அருண்ராஜ் தெரிவித்தார்.

சமுதாய வளா்ச்சிக்கு சேவையாற்றும் இளைஞா்களின் பணியை அங்கீகரிக்கும் வகையில்,முதலமைச்சா் மாநில இளைஞா் விருது ஒவ்வொரு ஆண்டும் சுதந்திரதினத்தன்று 15 முதல் 35 வயது வரையுள்ள 3 ஆண்கள் மற்றும் 3 பெண்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இந்த விருது ரூ.1,00,000/- ரொக்கம், பாராட்டுப் பத்திரம் மற்றும் பதக்கம் ஆகியவைகளை உள்ளடக்கியதாகும். இந்த விருதுக்கு இணையதளம் மூலம் 15.05.2024 வரை விண்ணப்பிக்கலாம் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

தற்போது 31-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, மேற்கண்ட நிதியாண்டுக்கு செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள தகுதியுள்ள நபா்கள் உரிய இணையதளத்தில் விண்ணப்பித்து பயன்பெறலாம். மேலும், விவரங்களுக்கு செங்கல்பட்டு மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞா் நலன் அலுவலா், கைப்பேசி எண். 7401703461 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் அருண்ராஜ் தெரிவித்துள்ளாா்.

Tags

Next Story