குழந்தை நீரில் மூழ்கி உயிரிழப்பு - காவல்துறை வழக்கு பதிவு !

குழந்தை நீரில் மூழ்கி உயிரிழப்பு - காவல்துறை வழக்கு பதிவு !

 குழந்தை நீரில் மூழ்கி உயிரிழப்பு

தண்ணீர் நிரப்பப்பட்ட பக்கெட் அருகே விளையாடிய குழந்தை நீரில் மூழ்கி உயிரிழப்பு
தண்ணீர் நிரப்பப்பட்ட பக்கெட் அருகே விளையாடிய குழந்தை நீரில் மூழ்கி உயிரிழப்பு. காவல்துறை வழக்கு பதிவு. கரூர் மாவட்டம், சிந்தாமணிப்பட்டி காவல் எல்லைக்குட்பட்ட, தரகம்பட்டி, வடக்கு தெருவை சேர்ந்தவர்கள் முருகானந்தம் - மாரியம்மாள் தம்பதிகள் இவர்களது ஒன்னரை வயது குழந்தை ஹரிமித்ரா. இந்த குழந்தை மார்ச் 29ஆம் தேதி காலை 8:30- மணி அளவில், அவர்களது வீட்டில் உள்ள குளியலறையில் தண்ணீர் நிரப்பப்பட்ட பக்கெட் அருகே விளையாடி கொண்டு இருந்தாள் குழந்தை ஹரிமித்ரா. அப்போது எதிர்பாராத விதமாக, தண்ணீர் நிரப்பப்பட்ட பிளாஸ்டிக் பக்கெட் உள்ளே விழுந்த அந்த குழந்தை நீரில் மூழ்கி தத்தளித்தது. இதனை சற்று காலதாமதமாக உணர்ந்த அவரது தாயார் மாரியம்மாள், உடனடியாக தனது குழந்தையை மீட்டு, அருகில் உள்ள மயிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள், குழந்தை ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். மாரியம்மாள் இந்த செய்தியை கேட்டு அதிர்ச்சடைந்தார். மேலும் இது தொடர்பாக காவல்துறையினருக்கு அளித்த தகவலின் பெயரில், சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர், உயிரிழந்த குழந்தையின் உடலை மீட்டு, உடற்கூறு ஆய்வுக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, பின்னர் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் சிந்தாமணிப்பட்டி காவல்துறையினர்.

Tags

Next Story