கிருஷ்ணகிரியில் குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்தும் முகாம்

கிருஷ்ணகிரியில் குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்தும் முகாம்

தடுப்பூசி செலுத்தும் பணி

கிருஷ்ணகிரியில் தேசிய குழந்தைகள் நல்வாழ்வு திட்டம் மூலம் நடந்த முகாமில் சுற்றுவட்டார பகுதி பொதுமக்கள் குழந்தைகளை அழைத்து வந்து தடுப்பூசி செலுத்தி சென்றனர்
கிருஷ்ணகிரி பகுதியில் தேசிய குழந்தைகள் நல்வாழ்வு திட்டம் மூலம் குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்தும் முகாம் கிருஷ்ணகிரி பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டம் மூலம் செயல்படும் அங்கன்வாடி மையத்தில் தடுப்பூசி செலுத்தும் முகாம் நடைபெற்றது. தேசிய குழந்தைகள் நலவாழ்வு திட்டம் மூலம் ஒவ்வொரு வட்டாரத்திலும் இரண்டு நடமாடும் மருத்துவ குழுக்கள் வட்டாரத்தில் உள்ள அனைத்து அங்கன்வாடி மையங்களில், குழந்தைகளை பரிசோதித்து, சிறிய பிரச்சினைகளுக்கு அங்கேயே சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் பழைய பேருந்து பகுதியில் தடுப்பூசி செலுத்தணும் முகாம் நடைபெற்றது சுற்றுவட்டாரப் பகுதியை சேர்ந்த குழந்தைகள் நேரில் வந்து பரிசோதனை மேற்கொண்டு தடுப்பூசி செலுத்தி சென்றனர்

Tags

Read MoreRead Less
Next Story