சிறார் வதை : இளைஞர் போக்சோவில் கைது

சிறார் வதை :  இளைஞர் போக்சோவில் கைது

ராஜீ

மீன்சுருட்டி அருகே காதலிப்பதாக கூறி சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த இளைஞரை ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் காவல்துறையினர் போக்ஸோ சட்டத்தில் கைது செய்தனர்.
கடலூர் மாவட்டத்தை சேர்ந்தவர் ராஜீ. கூலி தொழிலாளியான இவர் அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி அருகேயுள்ள கிராமத்தை சேர்ந்த 17 வயது சிறுமியை காதலிப்பதாக கூறி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனால் அச்சிறுமி கர்ப்பம் ஆகியுள்ளார். இதனையறிந்த அச்சிறுமியின் பெற்றோர் சிறுமியை கண்டித்துள்ளனர். மேலும் இதுகுறித்த புகாரின் பேரில் ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் குற்றவாளி ராஜூ மற்றும் இதற்கு உடந்தையாக இருந்த பெற்றோர்கள் மீது வழக்குபதிவு செய்தனர். மேலும் கடந்த 16 ஆம் தேதி ராஜூவின் தந்தை சீனிவாசனை கைது செய்த நிலையில் தலைமறைவாக இருந்த ராஜூவையும் கைது செய்துள்ளனர். மேலும் ராஜூவின் தாயார் ஜெயராணியை தேடி வருவதாக காவல்துறை தரப்பில் தகவல் தரப்பட்டுள்ளது.

Tags

Next Story