கொட்டும் கனமழையில் சிறுவர்கள் குளியல்

கொட்டும் கனமழையில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை குற்றால அருவியிலே குளித்தது போல் இருக்குதா என உற்சாக குளியல் போட்டு மகிழ்ந்தனர்.
அருப்புக்கோட்டையில் பிற்பகல் வேளையில் கொட்டும் கனமழையில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை குற்றால அருவியிலே குளித்தது போல் இருக்குதா என உற்சாக குளியல் போட்டு மகிழ்ந்தனர். விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில தினங்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் இன்று பிற்பகல் வேளையில் அருப்புக்கோட்டை, காந்திநகர், ஆத்திபட்டி, கஞ்சநாயக்கன்பட்டி, பாளையம்பட்டி, ராமசாமிபுரம், சுக்கிலநத்தம், வெள்ளையாபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் ஒரு மணி நேரம் கன மழை பெய்தது.‌ மேலும் தற்போது கோடை விடுமுறை என்பதால் வேலாயுதபுரம் பகுதியில் விடுமுறையில் வீட்டில் இருக்கும் சிறுவர்கள் கொட்டும் கனமழையில் குற்றால அருவியிலே குளித்தது போல் இருக்குதா என குளுகுளுவென மகிழ்ச்சியாக குளித்து மகிழ்ந்தனர்.‌ சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை கனமழையில் குளித்து மகிழ்ச்சியடைந்தனர். அருப்புக்கோட்டையில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது.

Tags

Next Story