ஜமீன் அகரம் அரசு பள்ளியில் குழந்தைகள் தின விழா

ஜமீன் அகரம் அரசு பள்ளியில் குழந்தைகள் தின விழா

குழந்தைகள் தின விழா 

திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் அருகே வேட்டவலம் ஜமீன் அகரம் அரசு பள்ளியில் குழந்தைகள் தின விழா நடைபெற்றது. தலைமையாசிரியர் முருகன் தலைமை தாங்கி முன்னாள் பிரதமர் நேருவின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார். ஆசிரியை மணிமேகலை முன்னிலை வகித்தார்.ஆசிரியை கௌரி வரவேற்றார். விழாவில் ஆசிரியர்கள் அருண்குமார், மார்கிரேட்மேரி ஆகியோர் குழந்தைகள் தினத்தின் வரலாறு மற்றும் நேருவின் சிறப்புகள் குறித்து மாணவர்களிடையே தமிழிலும், ஆங்கிலத்திலும் பேசினார்கள். தொடர்ந்து மாணவர்கள் நடனம், நாடகம், பாடல்கள் பாடி, கவிதை வாசித்தனர். மேலும் ஆசிரியர்களுக்கு நினைவுப் பரிசு வழங்கி குழந்தைகள் தின விழாவை கேக் வெட்டி கொண்டாடினர்.பின்னர் ஆசிரியர்கள் மாணவர்களுக்கு இனிப்புகள் வழங்கினர். முடிவில் ஆசிரியை சுடர்விழி நன்றி கூறினார்.

Tags

Next Story