கள்ளக்குறிச்சி ஆட்சியர் அலுவலகத்தில் குழந்தைகள் தின விழா

கள்ளக்குறிச்சி ஆட்சியர் அலுவலகத்தில் குழந்தைகள் தின விழா

குழந்தைகள் தினம் 

கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்தில், குழந்தைகள் பாதுகாப்பு அலகு சார்பில், குழந்தைகள் தின விழா கொண்டாடப்பட்டது. கலெக்டர் ஷ்ரவன்குமார் தலைமை தாங்கி, குழந்தைகளுக்கு பரிசுப் பொருட்களை வழங்கி, வாழ்த்து தெரிவித்தார். தொடர்ந்து பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை வீட்டிற்குள்ளே வைத்துக்கொள்ளாமல், வெளியில் விளையாடுவதை ஊக்குவிக்க வேண்டும். அவ்வாறு வெளியில் விளையாடும்போது குழந்தைகளுக்கு உடல் நலமும், மன நலமும் மேம்படும் என, அறிவுரை வழங்கினார். மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலர் இளையராஜா, அரசு அலுவலர்கள், பெற்றோர்கள் மற்றும் குழந்தைகள் கலந்துகொண்டனர்.

Tags

Next Story