குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு ஆலோசனை கூட்டம்

குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு ஆலோசனை கூட்டம்

ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றவர்கள்

குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி நகர பேருராட்சி அலுவலகத்தில் புதுக்கோட்டை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம் சார்பாக குழந்தை பாதுகாப்பு தொடர்பாக பேருராட்சி அளவிலான குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.இதில் ஆலங்குடி நகர பேருராட்சி தலைவர் தலைமை வகிதார்.

மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம் சார்பாக சமூக பணியாளர் நித்தியா கலந்துக்கொண்டார்.இதில் அவர் பேசுகையில், பெண்களுக்கு கல்வியில் முக்கியத்துவம் குறித்தும், குழந்தைகள் பாதுகாப்பு, குழந்தை திருமணம், பாலியல் வன் கொடுமை, பள்ளி செல்லாத குழந்தைகள், பிச்சை எடுக்கும் குழந்தைகள், கொத்தடிமை குழந்தைகள், குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பு, ஆதரவற்ற குழந்தைகள், கடத்தப்படும் குழந்தைகள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

Tags

Next Story