2 மணி நேர மழையால் நிலவிய குளிர்ச்சி

2 மணி நேர மழையால் நிலவிய குளிர்ச்சி

குமாரபாளையத்தில் சுமார் இரண்டு நேரம் வெளுத்து வாங்கிய கனமழையால் வெயில் தணிந்து மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

குமாரபாளையத்தில் சுமார் இரண்டு நேரம் வெளுத்து வாங்கிய கனமழையால் வெயில் தணிந்து மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளில் நேற்று வெயிலின் தாக்கத்தால் வெளியே வர தயங்கிய பொதுமக்கள் பெரும் அவதியடைந்து வந்த நிலையில், குமாரபாளையம் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளான காவேரி நகர், சின்னப்பநாயக்கன்பாளையம், எம்.ஜி.ஆர் நகர், குப்பாண்டபாளையம், தட்டான் குட்டை, எதிர் மேடு, வளையக்காரனூர் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று மாலை சுமார் 03:00 மணியளவில் திடீரென கனமழை பெய்தது.

சுமார் 2 மணி நேரம் பெய்த கன மழையின் காரணமாக சாலைகளில் மழைநீர் வெள்ளமாய் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் கோடை வெயிலின் தாக்கம் குறைந்து குளிர்ச்சி நிலவிய நிலையில் . பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர். மழையின் காரணமாக ஒரு மணி நேரத்திற்கு மேலாக மின்தடை ஏற்பட்டது. நேற்று பெரும்பாலான கோவில்கள், திருமண மண்டபங்களில் திருமணங்கள் அதிக அளவில் நடந்தன. திருமண வீட்டாருக்கு சிரமம் தராத வகையில், காலையில் மழை வராமல், மாலையில் வந்தது என பலரும் கருத்து தெரிவித்தனர்.

Tags

Next Story