பீரோவில் மிளகாய் பொடி தூவி 50 சவரன் நகை கொள்ளை

வீட்டின் கதவை உடைத்து பீரோவில் மிளகாய் பொடி தூவி கொள்ளை சம்பவத்தை கொள்ளையர்கள் அரங்கேற்றி உள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டம், ஆவடி, அருகே உள்ள நெமிலிச்சேரி பகுதியில் சண்முகம் என்பவர் அதே பகுதியில் உள்ள தனது மகள் வீட்டிற்கு சென்று மீண்டும் வந்து பார்த்தபோது, வீட்டின் கதவு முற்றிலும் உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த 50 சவரன் தங்க நகைகள் வெள்ளி பொருட்கள் மற்றும் பணம் ஆகியவற்றை மர்ம நபர்கள் கொள்ளையடித்து பீரோவில் மிளகாய் பொடியை தூவி விட்டு சென்றுள்ளனர், இதுகுறித்து சண்முகம் அளித்த புகாரில் பட்டாபிராம் போலீசார் வழக்கு பதிந்து பட்டாபிராம் காவல் ஆய்வாளர் ஜெகன் தலைமையில் தனிப்படை போலீசார் மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

Tags

Next Story