சங்கரன்கோவிலில் மிளகாய் விலை உயர்வு - விவசாயிகள் மகிழ்ச்சி

சங்கரன்கோவிலில் மிளகாய் விலை உயர்வு - விவசாயிகள் மகிழ்ச்சி

மிளகாய்

சங்கரன்கோவில் உழவர் சந்தையில் ஒரு கிலோ மிளகாய் ரூ.80க்கு விற்பனையானதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் ராஜபாளையம் சாலையில் அமைந்துள்ளது உழவர் சந்தை. இங்கு சங்கரன்கோவில் சுற்றுவட்டார பகுதியில் விவசாயிகள் பெரும்பாலான விவசாயிகள் தாங்கள் காய்கறிகள் பயிர் செய்த காய்கறிகள் மற்றும் பழங்கள் ஆகியவற்றை இடைத்தரகர்கள் தலையீடு இல்லாமல் குறைந்த விலையில் நேரடியாகவே தங்கள் பகுதியில் விற்பனை செய்து வருகின்றனர்.

அதேபோல் சங்கரன்கோவிலில் உள்ள பெரும்பாலான பொதுமக்கள் தங்களுக்கு தேவையான காய்கறிகள் மற்றும் பழங்கள் ஆகியவற்றை குறைந்த விலையில் நேரடியாகவே விவசாயம் இருந்து வாங்கிச் செல்கின்றனர். இதில் சங்கரன்கோவில் உழவர் சந்தை நிர்வாகத்தின் மூலம் இன்றைய காய்கறி விலை பட்டியல் மிளகாய் கிலோ ஒன்றுக்கு 80 ரூபாய் விலை கிடுகிடுன்னு உயர்ந்ததால் அப்பகுதி விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story