காட்டெருது தாக்கியதில் சித்தேரி ஊராட்சி மன்ற துணை தலைவர் படுகாயம்

குண்டம்பட்டி பிரிவு சாலையில் சென்றபோது, காட்டெருது தாக்கியதில் சித்தேரி ஊராட்சி மன்ற துணை தலைவர் படுகாயமடைந்தார்.
தர்மபுரி மாவட்டம், அரூர் அருகே சித்தேரி ஊராட்சி மன்றதுணை தலைவராக இருப்பவர் சக்திவேல் (28). இவர் கடந்த 28ம் தேதி, தர்மபுரி ஆட்சியர் அலுவலக கூட்டத்தில் கலந்துகொண்டு விட்டு, இரவு வீட்டிற்கு இருசக்கர வாகனத்தில் சித்தேரி மலைக்கு சென்று கொண்டிருந்தபோது, குண்டம்பட்டி பிரிவு சாலையில் சென்றபோது, காட்டெருது அவரை தாக்கியதில் நிலைதடுமாறி கீழே விழுந்த அவருக்கு படுகாயம் ஏற்பட்டது. சத்தம் கேட்டு வந்த கிராம மக்கள், அவரை மீட்டு அரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இது குறித்த தகவலின் பேரில், உதவி வன பாதுகாவலர் சரவணன், அரூர் வனச்சரக அலுவலர் நீலகண்டன், ஆகியோர், சக்திவேலுவுக்கு ஆறுதல் கூறினர்.

Tags

Next Story