சிவகாசியில் சித்திரை திருவிழா

சிவகாசியில் சித்திரை திருவிழா

சிவகாசியில் ஸ்ரீ மீனாட்சி திருக்கோவில் சித்திரை திருவிழாவின் 6 ஆம் நாள் நிகழ்ச்சியில் சுவாமியும்,அம்பாளும் புஷ்ப அலங்காரத்தில் வீதி உலா வந்தனர்.


சிவகாசியில் ஸ்ரீ மீனாட்சி திருக்கோவில் சித்திரை திருவிழாவின் 6 ஆம் நாள் நிகழ்ச்சியில் சுவாமியும்,அம்பாளும் புஷ்ப அலங்காரத்தில் வீதி உலா வந்தனர்.
சிவகாசியில் சித்திரை 6 ஆம் திருவிழா.சுவாமியும்,அம்பாளும் புஷ்ப அலங்காரத்தில் வீதி உலா... விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே திருத்தங்கல் அருள்மிகு ஸ்ரீமீனாட்சி அம்பிகை சமேத ஸ்ரீகருநெல்லிநாத சுவாமி திருக்கோவிலில்,சித்திரை திருவிழா கடந்த 12.4.2024 ஆம் தேதி கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கியது. முன்னதாக சுவாமிக்கு, அம்பாளுக்கும் அபிஷேகம் செய்யப்பட்டு வண்ண,வண்ண மலர்களால் அலங்காரம் செய்து சிறப்பு பூஜைகள்நடைப்பெற்றன. 6 ஆம் திருவிழாவுல் சுவாமியும், அம்பாளும் புஷ்ப வாகனத்தில் வீதி உலா நடைப்பெறுகிறது. மேலும் தொடர்ந்து பத்து நாட்கள் நடைப்பெறும் இத்திருவிழாவில் ஒவ்வொரு உபயதாரர்கள் உபயம் அளிக்க,ஒவ்வொரு நாளும் அலங்கார வாகனத்தில் சுவாமி,அம்பாளும் வாணவேடிக்கையுடன் வீதி உலா நிகழ்ச்சி நடைப்பெறும். மேலும் திருவிழாவின் முக்கிய திருவிழாவான வரும் 22-4-2024 ஆம் தேதி திங்கள்கிழமை மாலை 4.00 மணியளவில் திருத்தேரோட்டம் வைபவம் நடைபெறுகிறது.திருவிழா ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் தேவி மற்றும் அறங்காவலர் குழுவினர்,உபயதாரர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.

Tags

Next Story