திருநாகேஸ்வரம் ஆதிதேவி மகா மாரியம்மன் கோயிலில் சித்ரா பௌர்ணமி விழா

திருநாகேஸ்வரம் ஆதிதேவி மகா மாரியம்மன் கோயிலில் சித்ரா பௌர்ணமி விழா

ஆதிதேவி மகா மாரியம்மன்

திருநாகேஸ்வரம் ஆதிதேவி மகா மாரியம்மன் கோயிலில் சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு நடந்த பால்குட பெருவிழாவில் பக்தர்கள் பால்குடம் எடுத்து வந்து தங்களது நேர்த்திக்கடன் செலுத்தி, அம்மனை மனமுருக வேண்டி தரிசனம் செய்தனர்.
கும்பகோணம் அருகேயுள்ள திருநாகேஸ்வரம் மேலவீதியில் அமைந்துள்ள ஆதிதேவி மகாமாரியம்மன் திருக்கோவில் இப்பகுதியில் மிகவும் பிரசித்தி பெற்ற சக்தி தலமாகும் இங்கு ஆண்டு தோறும் சித்ரா பவுர்ணமி தினத்தில், பால்குடப் பெருவிழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம் அதுபோலவே, இவ்வாண்டும், சித்ரா பௌர்ணமி தினமான இன்று, அருகில் உள்ள விநாயகர் கோவிலிருந்து ஆண்கள் பெண்கள் சிறுவர் சிறுமியர்கள் முதியவர்கள் என இரண்டாயிரத்துக்கும் மேற்பட்டோர் பால்குடம் எடுத்து திருநாகேஸ்வர நகர முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்து ஆதி தேவி மாரியம்மன் கோயிலை வந்தடைந்த பிறகு, அங்கு தங்களது நேர்த்திக் கடனை செலுத்தினர்

Tags

Read MoreRead Less
Next Story