மகாசக்தி மாரியம்மனுக்கு சித்ரா பவுர்ணமி பூஜை

மகாசக்தி மாரியம்மனுக்கு சித்ரா பவுர்ணமி பூஜை

சிறப்பு பூஜை 

கள்ளக்குறிச்சி மாவட்டம், நீலமங்கலம் மகாசக்தி மாரியம்மனுக்கு சித்ரா பவுர்ணமியையொட்டி சிறப்பு பூஜை நடைபெற்றது.

கள்ளக்குறிச்சி அடுத்த நீலமங்கலம் மகாசக்தி மாரியம்மனுக்கு சித்ரா பவுர்ணமியையொட்டி, மூலவர் உற்சவர் சுவாமிகளுக்கு 16 வகை திரவியங்களால் சிறப்பு அபிஷேகங்கள் நடத்தப்பட்டது. சிறப்பு அலங்காரங்களுக்குப் பின் உற்சவர் சுவாமியை ராஜகோபுரம் முன் ஊஞ்சலில் எழுந்தருள செய்தனர்.

உலக நலன் வேண்டி மகா சங்கல்பம் செய்துவைக்கப்பட்டு, லலிதா சகஸ்ரநாம சங்கீர்த்தனைகளுடன் குங்கும அர்ச்சனை நடந்தது. தொடர்ந்து மாரியம்மனுக்கு தாலாட்டு பாடல்களை பாடி ஊஞ்சல் உற்சவம் நடந்தது. ஏற்பாடுகளை கிராம மக்கள் செய்திருந்தனர்.

Tags

Next Story