கந்தசாமி கோவிலில் சித்திரை திருவிழா முன்னேற்பாடுகள் தீவிரம்

கந்தசாமி கோவிலில் சித்திரை திருவிழா முன்னேற்பாடுகள் தீவிரம்

திருப்போரூரில் உள்ள கந்தசாமி கோவிலில் சித்திரை திருவிழா முன்னேற்பாடுகள் தீவிரமாக நடக்கிறது


திருப்போரூரில் உள்ள கந்தசாமி கோவிலில் சித்திரை திருவிழா முன்னேற்பாடுகள் தீவிரமாக நடக்கிறது.

செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூரில் உள்ள கந்தசுவாமி கோவிலில், ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் வசந்த உற்சவம் நடைபெறுவது வழக்கம். இந்தாண்டு வசந்த உற்சவம், வரும் 19-ம் தேதி துவங்கி, 23-ம் தேதி நிறைவடைகிறது. விழா துவங்கும் நாளிலிருந்து, தொடர்ந்து ஐந்து நாட்கள் உற்சவ மூர்த்தியான கந்தசுவாமி, வள்ளி, தெய்வானையுடன், கோவிலுக்கு அருகில் உள்ள வசந்த மண்டபத்தில் எழுந்தருள்வார்.

அங்கு, சுவாமிக்கு சிறப்பு அபிஷேகமும், தீபாராதனைகளும் நடைபெறும். மீண்டும் இரவு 7:30 மணிக்கு, சுவாமி கோவிலை வந்தடைவார். இறுதி நாளில், சுவாமிக்கு திருக்கல்யாண உற்சவம் நடைபெறும். இவ்விழாவை முன்னிட்டு, வசந்த மண்டபத்தில் பந்தல் அமைத்தல், வளாக பகுதியை துாய்மைப்படுத்துதல் உள்ளிட்ட முன்னேற்பாட்டு பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன.

Tags

Next Story