சித்திரைமாத பவுர்ணமி: திருவக்கரை வக்ரகாளியம்மன் கோவிலில் மகா தீபம்

சித்திரைமாத பவுர்ணமி: திருவக்கரை வக்ரகாளியம்மன் கோவிலில் மகா தீபம்

மஹா தீபம் ஏற்றப்பட்டது

சித்திரைமாத பவுர்ணமி: திருவக்கரை வக்ரகாளியம்மன் கோவிலில் மகா தீபம் ஏற்றப்பட்டது.

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே உள்ள திருவக்கரையில் பிரசித்தி பெற்ற வக்ர காளியம்மன் கோவிலில் மாதந்தோறும் பவுர்ணர்மி தினத்தன்று மகா தீபம் ஏற்றப்படுவது வழக்கம். அந்த வகையில் சித்ராபவுர்ணமியையொட்டி நேற்று முன்தினம் காலை முதல் வக்ரகாளி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெற்றது.

பின்னர் சிறப்பு அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு காட்சியளித்தார். தொடர்ந்து நள்ளிரவு 12 மணியளவில் கோவிலின் மேல் பிரகாரத் தில் அமைந்துள்ள பீடத்தில் தீபம் ஏற்றப்பட்டது. அப்போது அங்கே திரண்டு நின்ற பக்தர்கள் ஓம் காளி,

வக்ர காளி, ஜோதி, ஜோதி, வக்ரகாளி ஜோதி, ஜோதியை பார்த்தால் பாவம் தீரும் என கோஷம் எழுப்பியபடி தீபத்தை தரிசனம் செய்தனர். இதில் திருவக்கரை மற்றும் சுற்றியுள்ள பகுதியை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை இந்து சமய அற நிலைய துறையினர் செய்திருந்தனர்.

திருவக்கரை மகா தீபத்தை யொட்டி விழுப்புரம், திண்டிவனம், புதுச்சேரி, மற்றும் பல வழித்தடங்களில் இருந்து சிறப்பு அரசு பஸ்கள் இயக்கப்பட்டன.

Tags

Next Story