சித்தூர் அந்தோணியார் கோவில் திருத்தேர் விழா கொடியேற்ற விழா

சித்தூர் அந்தோணியார் கோவில் திருத்தேர் விழா கொடியேற்ற விழா

கொடியேற்ற விழா 

கோவிலூர் அருகே அமைந்துள்ள சித்தூர் அந்தோணியார் கோவிலில் தேர் திருவிழாவை முன்னிட்டு ஆயர் தலைமையில் கொடியேற்ற விழா நடைபெற்றது.

தர்மபுரி மாவட்டம் மற்றும் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட நல்லம்பள்ளி வட்டம் கோவிலூர் பங்கிற்கு உட்பட்ட சித்தூரில் நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த புனித அந்தோணியார் திருத்தலம் அமைந்துள்ளது. நேற்று மாலை 6 மணி அளவில் தர்மபுரி மறை மாவட்ட ஆயர் மேதகு லாரன்ஸ் பயஸ் தலைமையில் புனித அந்தோணியார் திருத் தேர் திருவிழாவை முன்னிட்டு அந்தோணியார் கொடி கோவிலை சுற்றி ஜெபமாலை செய்து ஊர்வலமாக கொண்டுவரப்பட்டு, பின் ஆயிரால் அர்ச்சிக்கப்பட்டு கொடியேற்றம் செய்யப்பட்டது.

பின்பு கோவிலூர் பங்குத்தந்தை அருட்திரு ஆரோக்கிய சுவாமி மற்றும் உதவி பங்குதந்தை ஆரோக்கியம், மற்றும் அருட் தந்தையர்களால் கூட்டு பாடத் திருப்பலி நிறைவேற்றப்பட்டது. இந்த நிகழ்வில் நூற்றுக்கணக்கான கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story